×

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு எடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் கருத்து

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்ட தொடங்கியுள்ளது. தற்போது அனைத்து அணிகளும் 7 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. முதல் நான்கு இடத்தில் சென்னை, குஜராத், ரக்ஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. 5வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை கோப்பை வென்ற அணி என்ற பெருமைக்குரிய மும்பை கடந்த ஐபிஎல் தொடரிலும் சொதப்பியது, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சொதப்பி வருகிறது. குறிப்பாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ரன் எடுக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்த ஆனது நடைபெற்ற 7 ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஷர்மா 181 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். திலக் வர்மா, கேமரூன் கிரீன் ஆகியோர் மட்டுமே மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மும்பை அணி ஆடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி 4 போட்டிகளில் தோல்வியடைந்து 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ரோகித் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்; “ரோஹித் சர்மா தற்போதைக்கு ஓய்வு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும். ஐபிஎல் தொடரின் இறுதியில் சில போட்டிகளில் பங்கேற்கலாம், ஆனால் இப்போது அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்ற ஏக்கத்துடன் மும்பை அணி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

The post ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு எடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Rochith Sharma ,IPL ,Sunil Kavaskar ,Mumbai ,Rokit Sharma ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு